செய்திகள் :

சுற்றுலாத் தளத்தில் மூழ்கிய பயணிகள்! 2 இளைஞர்கள் பலி!

post image

மகாராஷ்டிர மாநிலத்தின் கடலில் மூழ்கிய சுற்றுலா பயணிகளில் 2 இளைஞர்கள் பலியாகினர்.

சிந்துதுர்க் மாவட்டத்தின் மல்வான் பகுதியிலுள்ள பிரபல சுற்றுலாத் தளமான தர்கலி கடற்கரையில், நேற்று (பிப்.22) புணேவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, கடலில் நீந்தி விளையாடிய அவர்கள் காலை 11.30 மணியளவில் அவர்கள் நீந்தி அந்த கடலின் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நீந்த முடியாமல் உயிருக்கு போராடிய 3 பேரை அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுள்ளனர். ஆனால், கடலுக்குள் மூழ்கிய சுபம் சுசில் சோனாவானே (வயது 22) மற்றும் ரோஹித் பாலாசாஹேப் சோலி (21) ஆகிய இருவர் பரிதாபமாக பலியாகினர்.

இதையும் படிக்க: ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!

மேலும், மீட்கப்பட்டவர்களில் ஒருவரான ஓம்கர் போசாலே (23) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவயிடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி உடற் கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓம்கர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை அபாயக் கட்டத்திலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்ய... மேலும் பார்க்க

சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்ட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளி... மேலும் பார்க்க

சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று ... மேலும் பார்க்க

எலான் மஸ்கிற்கு வங்கதேச இடைக்கால பிரதமர் அழைப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்.19 அவர... மேலும் பார்க்க