செய்திகள் :

ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!

post image

நேபாள நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள தப்ளேஜங் மாவட்டத்தில் சர்சைக்குரிய ரோப் கார் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட காவலர்களுடனான மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

தப்ளேஜன் மாவட்டத்தின் பதிபரா பகுதியில் கொண்டுவரப்படவிருக்கும் ரோப் கார் திட்டத்தினால் அப்பகுதியிலுள்ள வரலாற்று சிறப்பு அம்சங்கள் அழிவுக்குள்ளாகும் எனக் கூறி அந்த திட்டத்திற்கு எதிராக ‘நோ கேபிள் கார்’ எனும் குழு போராடி வருகின்றது.

இந்நிலையில், நேற்று (பிப்.22) போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் உண்டான மோதலில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வன்முறையில் தொடர்புடைய 15 பேரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து, தப்ளேஜங் மாவட்ட அதிகாரிகள் பதிபரா பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இன்று (பிப்.23) காலை முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

இதையும் படிக்க: வங்கதேசம்: சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகம்!

அதன்படி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், பேரணிகள், போராட்டங்கள் போன்ற செயல்களில் ஈடுபடவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்.20 அன்று பதிபரா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதினால் பதிபரா ரோப் கார் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அந்நாட்டு எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்ய... மேலும் பார்க்க

சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்ட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளி... மேலும் பார்க்க

சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று ... மேலும் பார்க்க

எலான் மஸ்கிற்கு வங்கதேச இடைக்கால பிரதமர் அழைப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்.19 அவர... மேலும் பார்க்க