செய்திகள் :

மாணவிக்கு பாலியல் தொல்லை; கல்லூரி விடுதி காவலர் கைது

post image

காரைக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கல்லூரி விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி, படித்து வருகிறார்.

இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு மாணவி கழிப்பறை செல்ல முயன்றபோது, மாணவியை விடுதியின் காவலர் பின்தொடர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனிடையே, மாணவி கூச்சலிட்டதால், விடுதியில் இருந்தவர்கள் ஒன்றுகூடி, மாணவியை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவலாளியின் நடவடிக்கையை மாணவி விவரித்தவுடன், காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மாணவிக்கு காவலாளி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததால், காவலாளி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். விடுதி காவலரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர்... மேலும் பார்க்க

வழக்கறிஞர் திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்சூட்டிய முதல்வர்!

கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழை!

தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

நாம் அளவோடு பெற்றதால்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அவர் ... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை!

தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றின் மீது உ... மேலும் பார்க்க