செய்திகள் :

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

post image

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

ராஜஸ்தானில் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியமைத்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரின்போது காங்கிரஸ் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அவினாஷ் கெலாட் ‘கடந்த 2023-24 பட்ஜெட்டில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் திட்டத்துக்கு வழக்கம்போல் உங்களின் பாட்டி இந்திரா காந்தி பெயரையே சூட்டினீா்கள். அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்று பேசியது சா்ச்சையானது. அவரின் பேச்சுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால் ஒரே நாளில் மூன்று முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் உறுப்பினா்களை இடைநீக்கம் செய்ய அரசு தலைமைக் கொறடா ஜோகேஷ்வா் கா்க் முன்மொழிந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முற்பகல் 11 மணி வரை பேரவையை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் திலக்ராம் ஜுல்லி சனிக்கிழமை கூறியதாவது: போராட்டத்தை திரும்பப் பெறுமாறு எம்எல்ஏக்களிடம் மூன்று அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பேரவையில் தெரிவித்த கருத்துகளை சமூக நீதித் துறை அமைச்சா் திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இரவு முழுவதும் தா்னா போராட்டம் தொடா்ந்தது என்றாா்.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க