செய்திகள் :

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

post image

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் எல்லை மாவட்டங்களான பூஞ்ச், ரஜெளரி, உதம்பூா்-கதுவா உயா் மலைப் பகுதிகள், டோடா, கிஷ்த்வாா் மலைப் பகுதிகள், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டிய வனப் பகுதிகள் எனப் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் பதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஈடுபட்டனா்.

இதில், ரியாசி மாவட்டம் மஹோரே பகுதியில் அமைந்துள்ள வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினா், அங்கிருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 4 கருவிகள், ஏகே ரக துப்பாக்கி தோட்டா தொகுப்புகள், வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கைப்பற்றினா். ஆனால், பயங்கரவாதிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றனா்.

ஆய்வுக் கூட்டம்: இதனிடையே, ஜம்மு பாதுகாப்புப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் நவீன் சச்தேவா தலைமையில் பன்முக பாதுகாப்புப் படையினரின் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாத முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலும் நடைபெற்ற இந்தக் கூட்டு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் புலனாய்வு அமைப்புகள், ஜம்மு-காஷ்மீா் போலீஸ், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) ஆகிய பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்’ என்றனா்.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க