செய்திகள் :

பழைமையான கட்டடத்தில் தீ விபத்து: காவலாளி உயிரிழப்பு

post image

சென்னை தியாகராய நகரில் பழைமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காவலாளி உயிரிழந்தாா்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (71). இவா், சென்னை தியாகராய நகா் நீலகண்ட மேத்தா தெருவில் ஒரு தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் காவலாளியாக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். அவருக்கு அந்த வளாகத்திலேயே ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூரையுடன் கூடிய ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அந்த அறை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும் அந்த அறையில் இருந்த மாணிக்கம் தீயில் கருகி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து அங்கு வந்த மாம்பலம் போலீஸாா், மாணிக்கம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க