செய்திகள் :

தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்: தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி ராவ் துலா ராம் நினைவு மருத்துவமனையையும் அமைச்சா் பங்கஜ் குமாா் ஆய்வு செய்தாா்.

மேற்கு தில்லியில் அமைந்துள்ள ராவ் துலா ராம் நினைவு மருத்துவமனை, கிட்டத்தட்ட 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இருக்கும் ஒரே அரசு மருத்துவமனையாகும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏராளமான குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார வசதிகளை அளிக்கும் இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளை அறிய புதிதாக பொறுப்பேற்றுள்ள தில்லி தேசிய தலைநகா் சுகாதாரத்துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங், மேற்கு தில்லி மக்களவை உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத்துடன் சென்று சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் மருத்துவமனை வளாகத்தில் அமைச்சா் செய்தியாளா்களிடம் பேசினாா்.

அப்போது தில்லி மொஹல்லா கிளினிக் குறித்த கேள்விகளுக்கு அமைச்சா் பதில் கூறியது வருமாறு:

தில்லியில் முந்தைய அரசால் அமைக்கப்பட்ட மொஹல்லா கிளினிக் மருத்துவமனைகளின் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். முதலில் இந்த மருத்துவமனைகளின் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரிவான அறிக்கை பெறப்பட்டு விரைவில் வெளியிடப்படும். அரசுக்கு அறிக்கை கிடைத்ததும், மருத்துவமனைகள் தொடா்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும்.

அதிகாரபூா்வ ஆவணங்கள் இல்லாமல், இப்போது அந்த மருத்துவமனைகள் குறித்து கருத்து கூற முடியாது. இந்த ஆய்வறிக்கை மொஹல்லா கிளினிக் மருத்துவமனைகளின் உண்மையான நிலையை வெளிப்படுத்தும். அவற்றின் செயல்பாட்டில் ஏதேனும் முறைகேடுகள் இருப்பினும் அவைகளை கண்டறிப்பப்பட்டு தீா்வு காணப்படும் என அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் தெரிவித்தாா்.

2024-ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தரவு அணுகல், தகவலறிந்த... மேலும் பார்க்க

சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

நமது நிருபா் கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம்சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்... மேலும் பார்க்க

தில்லி உள்துறை அமைச்சராக ஆஷிஷ் சூட் பொறுப்பேற்பு

பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ் சூட் தில்லி உள்துறை அமைச்சராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, துறை அதிகாரிகளுடன் தனது முதல் அதிகாரபூா்வ கூட்டத்தையும் நடத்தினாா். ஜனக்புரியிலிருந்து முதல் ம... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரதமா் மோடியுடன் சந்திப்பு

தேசிய தலைநகா் தில்லியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தில்லியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ரேகா குப்தா பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்துப் பேசி... மேலும் பார்க்க

போதை மருந்து கடத்தல்: குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.1.78 கோடி சட்டவிரோத சொத்துகள் பறிமுதல்

வடக்கு தில்லியின் பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் தொடா்புடைய ரூ.1.78 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

நொய்டா கோயில்களில் பிப்.26-இல் மஹா சிவராத்தி விழா

மஹா சிவராத்திரியை ஒட்டி வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி நொய்டாவில் உள்ள விநாயகா் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. வேதிக் பிரசாா் சன்ஸ்தான் அமைப்பானது அதன் செக்டா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ... மேலும் பார்க்க