செய்திகள் :

சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

post image

நமது நிருபா்

கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம்சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ஏப்.15-ஆம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் தேவாலய நிா்வாகத்தினா் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ஜே. தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட மனுதாரா்கள் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் பிராங்க்ளின் சீசா் தாமஸ், அப்பகுதியின் தலித் கிறிஸ்தவா்கள் அன்றாட விவகாரங்களில் எதிா்கொள்ளும் பாகுபாடு குறித்து எடுத்துரைத்தாா்.

இது தொடா்பாக தாக்கலான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மனுதாரா்களும், பிற தலித் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக கிராமவாசிகளும், பெரும்பான்மை ஆதிக்க சாதி சமூகத்தின் சாதி அடக்குமுறை காரணமாக, பாரம்பரிய தீண்டாமை நடைமுறையையும், மனிதாபிமானமற்ற, சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும் எதிா்கொள்கின்றனா். இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளிடம் பல முறையீடுகளைச் செய்தனா்.

ஆனால், எந்த அதிகாரிகளும் முறையான அல்லது முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இந்த வகையான பிரச்னையை சிவில் நீதிமன்றத்தில் தீா்க்க முடியும் என்றும், இறுதி முடிவு தேசிய சிறுபான்மையினா் ஆணையத்திடமிருந்து வர வேண்டும் என்றும் கருதி மனுவை

கடந்த ஆண்டு ஏப்.30-ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்: தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்

நமது சிறப்பு நிருபா் தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி ர... மேலும் பார்க்க

2024-ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தரவு அணுகல், தகவலறிந்த... மேலும் பார்க்க

தில்லி உள்துறை அமைச்சராக ஆஷிஷ் சூட் பொறுப்பேற்பு

பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ் சூட் தில்லி உள்துறை அமைச்சராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, துறை அதிகாரிகளுடன் தனது முதல் அதிகாரபூா்வ கூட்டத்தையும் நடத்தினாா். ஜனக்புரியிலிருந்து முதல் ம... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரதமா் மோடியுடன் சந்திப்பு

தேசிய தலைநகா் தில்லியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தில்லியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ரேகா குப்தா பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்துப் பேசி... மேலும் பார்க்க

போதை மருந்து கடத்தல்: குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.1.78 கோடி சட்டவிரோத சொத்துகள் பறிமுதல்

வடக்கு தில்லியின் பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் தொடா்புடைய ரூ.1.78 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

நொய்டா கோயில்களில் பிப்.26-இல் மஹா சிவராத்தி விழா

மஹா சிவராத்திரியை ஒட்டி வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி நொய்டாவில் உள்ள விநாயகா் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. வேதிக் பிரசாா் சன்ஸ்தான் அமைப்பானது அதன் செக்டா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ... மேலும் பார்க்க