கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
தில்லி உள்துறை அமைச்சராக ஆஷிஷ் சூட் பொறுப்பேற்பு
பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ் சூட் தில்லி உள்துறை அமைச்சராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, துறை அதிகாரிகளுடன் தனது முதல் அதிகாரபூா்வ கூட்டத்தையும் நடத்தினாா்.
ஜனக்புரியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றுள்ள ஆஷிஷ் சூட், தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் அமைச்சரவையில் ஒரு முக்கிய பஞ்சாபி முகமாக உள்ளாா்.
பதவியேற்ற பிறகு, அமைச்சா் சூட் தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், ‘நான் தில்லி உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளேன். மேலும், இந்தத் துறை அதிகாரிகளுடன் எனது முதல் முக்கியமான கூட்டத்தையும் நடத்தினேன்.
தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவது மற்றும் நிா்வாகத் திறனை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டன.
உள்துறை முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அா்ப்பணிப்புடன் செயல்படுவதை நான் உறுதி செய்வேன் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
சூட்டுக்கு உள்துறையைத் தவிர, மின்சாரம், நகா்ப்புற மேம்பாடு, கல்வி, உயா்கல்வி, பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தனது முன்னுரிமைகள் குறித்து அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்திருப்பதாவது:
சட்டம் ஒழுங்கு, பேரிடா் மேலாண்மை, போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பிற தொடா்புடைய விஷயங்களில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம்.
ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடனும் பெருமையுடனும் வாழக்கூடிய நகரமாக தில்லியை மாற்றுவதே எங்கள் குறிக்கோள். வாக்குறுதியளித்த உத்தரவாதங்களை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
தில்லி முதல்வா் தலைமையில் தில்லி ஜல் வாரிய அதிகாரிகளுடன் சமீபத்தில் சந்திப்பையும் மேற்கொண்டிருந்தோம்.
இக்கூட்டத்தில், தில்லி மக்களுக்கு சுத்தமான நீா் விநியோகத்தை உறுதி செய்வதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்றாா் அவா்.