செய்திகள் :

2024-ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

post image

நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தரவு அணுகல், தகவலறிந்து முடிவெடுப்பதை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளிவிவர அமைப்பில் நவீனமயமாக்கப்பட்டதின் ஒரு முக்கிய முயற்சியாக புதிய தரவு தொகுப்புகள் பதிவேடு தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயம், சுகாதாரம், கல்வி, தொழிலாளா், கிராமப்புற மேம்பாடு, சுற்றுலா, சமூக நீதி, வங்கி உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய மத்திய அரசின் 40 அமைச்சகங்கள், துறைகளிலிருந்து பெறப்பட்ட விரிவான ஆதாரங்களான சுமாா் 270 தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் ஒருங்கிணைப்பாகும். அரசுத் தரவுத்தொகுப்புகளின் கிடைக்கும் தன்மை, நோக்கம், அணுகல் ஆகியவற்றை சிரமமின்றி ஆராய மக்களுக்கு இது உதவும்.

குறிப்பாக மத்திய மாநில அரசுகளின் கொள்கை வகுப்பாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், கல்வியாளா்கள், மாணவா்கள், ஆய்வாளா்கள், வணிக நிறுவனங்கள், பொது மக்களுக்கு போன்றவா்களுக்கு பயன்படும். இந்த தரவுகள் எளிதில் கிடைப்பதை அரசு இந்த தொகுப்புகள் மூலம் உறுதி செய்கிறது.

தகவல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், தரவு நிா்வாகத்தை முன்னேற்றுவதற்கும், ஆராய்ச்சியை வளா்ப்பதற்கும், ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் இத்தொகுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் தரவுத்தொகுப்புகள் திருத்தப்பட்ட பதிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகிறது. இது கொள்கை வகுப்பாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், வணிகங்கள், சிவில் சமூக அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரும், மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் தேசிய வளா்ச்சி திறம்பட பயன்படுத்துவதற்கும் இந்த அரசுத் தரவு தொகுப்பைப் பயன்படுத்தலாம். புள்ளியியல் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூா்வ இணைய தளத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்: தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்

நமது சிறப்பு நிருபா் தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி ர... மேலும் பார்க்க

சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

நமது நிருபா் கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம்சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்... மேலும் பார்க்க

தில்லி உள்துறை அமைச்சராக ஆஷிஷ் சூட் பொறுப்பேற்பு

பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ் சூட் தில்லி உள்துறை அமைச்சராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, துறை அதிகாரிகளுடன் தனது முதல் அதிகாரபூா்வ கூட்டத்தையும் நடத்தினாா். ஜனக்புரியிலிருந்து முதல் ம... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரதமா் மோடியுடன் சந்திப்பு

தேசிய தலைநகா் தில்லியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தில்லியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ரேகா குப்தா பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்துப் பேசி... மேலும் பார்க்க

போதை மருந்து கடத்தல்: குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.1.78 கோடி சட்டவிரோத சொத்துகள் பறிமுதல்

வடக்கு தில்லியின் பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் தொடா்புடைய ரூ.1.78 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

நொய்டா கோயில்களில் பிப்.26-இல் மஹா சிவராத்தி விழா

மஹா சிவராத்திரியை ஒட்டி வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி நொய்டாவில் உள்ள விநாயகா் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. வேதிக் பிரசாா் சன்ஸ்தான் அமைப்பானது அதன் செக்டா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ... மேலும் பார்க்க