செய்திகள் :

விராலிமலை அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி!

post image

விராலிமலை: விராலிமலை அருகே சாலை நடுவே கொட்டப்பட்டிருந்த மண்ணுக்குள் இருசக்கர வாகனம் பாய்ந்து தலையில் பலத்த காயமடைந்து இளைஞர் நிகழ்விடத்திலேயே பலியானார்.

விராலிமலை அடுத்துள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்த பன்னீர் மகன் ஆல்பர்ட்(30), வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தாயகம் திரும்பியுள்ளர். சிறிது நாள்கள் வீட்டில் இருந்த அவர், தற்போது விராலிமலை அடுத்துள்ள மாத்தூரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இதையும் படிக்க: செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

இந்த நிலையில், பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பேராம்பூர், நால்ரோடு இடையே சன்னாசி மலை அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், பாலம் கட்டுவதற்கு சாலை நடுவே கொட்டப்பட்டிருந்த மண்ணுக்குள் பாய்ந்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆல்பர்ட் நிகழ்விடத்திலேயே பலியானார். காலை பணிக்கு செல்லும் போது சாலையில் மண் இல்லாமல் இருந்தநிலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென்று கொட்டப்பட்டிருந்த மண் குவியலால்தான் இந்த விபத்து நேரிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தகவலறிந்த மாத்தூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்சூட்டிய முதல்வர்!

கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழை!

தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

நாம் அளவோடு பெற்றதால்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அவர் ... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை!

தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றின் மீது உ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா: பிப்.26-ல் தொடக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்.26-ம் தேதி தெற்குரதவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி மார்ச்.2-ம் தேதி வரை 5... மேலும் பார்க்க

திமுகவும், பாஜகவும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை: டி.ஜெயக்குமார்

திமுகவும், பாஜகவும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை மயிலாப்பூரில் மாபெர... மேலும் பார்க்க