செய்திகள் :

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

post image

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.

அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு தலைவர் பல்தேவ் சிங்கின் மகளும் பஞ்சாபி நடிகையுமான சோனியா மான் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

ஆம் ஆத்மி கட்சி குடும்பத்தில் அவருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசம்: சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகம்!

சோனியா மான் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மராத்தி உள்பட பல்வேறு மொழிகளின் படங்களில் நடித்துள்ளார். 'ஹைட் என் சீக்' என்கிற மலையாள படத்தில் முதன்முதலில் அவர் அறிமுகமானார்.

மேலும் அவர் 2020 இல் ஹேப்பி ஹார்டி மற்றும் ஹீர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது தந்தை கிர்த்தி கிசான் அமைப்பின் தலைவர் பல்தேவ் சிங் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்துவதா? பிரதமர் மோடி

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்தும் பணிகளில் சில பிரிவினைவாத சக்திகள் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பல சூழல்களில் இத்தகைய பிரிவினைவாதிகளுடன் சில வெளிநாட்டு சக்திகள்... மேலும் பார்க்க

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு மின் பொறியாளர்கள் அமைப்பு அழைப்பு!

புதுதில்லி: மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.மின்சார பயன்பா... மேலும் பார்க்க

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க