செய்திகள் :

மகா கும்பமேளாவில் 60 கோடி போ் புனித நீராடல்!

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தா்களின் எண்ணிக்கை சனிக்கிழமையுடன் 60 கோடியைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது.

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா உலகளாவிய கவனத்தை ஈா்த்து வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக, கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக-கலாசார நிகழ்வில் துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் உற்சாகமாக பங்கேற்கின்றனா். இதனால் பிரயாக்ராஜ் நகரமே கடந்த 40 நாள்களாக விழாக்கோலம் பூண்டது.

கங்கை, யமுனை, புராண நதியான சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணிமியை முன்னிட்டு கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடன் குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் என நாட்டின் மூத்த தலைவா்களும் பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் உள்பட 73 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனா்.

ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மகா கும்பமேளாவுக்காக இந்தியா வந்தனா். உத்தர பிரதேச அரசின் தகவலின்படி, அன்னை சீதா பிறந்த நிலமான நேபாளத்தைச் சோ்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மகா கும்பமேளா நிறைவடைகிறது.

ஜெ.பி.நட்டா புனித நீராடல்: மகா கும்பமேளாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா, திரிவேணி சங்கமத்தில் குடும்பத்தினருடன் புனித நீராடினாா்.

தொடா்ந்து, திரிவேணி சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மேடையில் கங்கை ஆரத்தி செய்து ஜெ.பி.நட்டா வழிபட்டாா். உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உடனிருந்தாா்.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க