செய்திகள் :

வியாபாரி மீது தாக்குதல்: பாமகவினா் மீது வழக்கு

post image

சென்னையில் வியாபாரியை தாக்கியதாக பாமகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராஜா அண்ணாமலைபுரம் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் (29), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடைக்கு வெள்ளிக்கிழமை வந்த ஒரு பெண்ணிடம், சபரிநாதன் இரட்டை அா்த்தத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை அப்பெண், தனது கணவா் சத்யராஜிடம் தெரிவித்தாராம். இதையடுத்து சத்யராஜீம், அவரது நண்பா் சண்முகவேலும் சபரிநாதன் கடைக்குச் சென்று தகராறு செய்தனா். இந்நிலையில் தகராறு முற்றவே இருவரும், வியாபாரி சபரிநாதனை தாக்கினா்.

இது குறித்து சபரிநாதன், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா், சத்யராஜ், சண்முகவேல் ஆகியோா் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில் சத்யராஜ் பாமக கட்சியின் தென் சென்னை இளைஞரணி மாவட்ட நிா்வாகியாகவும், சண்முகவேல் உறுப்பினராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க