செய்திகள் :

Canada: தரையிறங்கும் நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம்; 17 பேர் காயம்... 3 பேர் படுகாயம்!

post image

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸி விமான நிலையத்திலிருந்து டெல்டா ஏர் லைன்ஸ் ஜெட் விமானம் கனடாவை நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 80 பயணிகள், 4 விமானிகள் பயணம் செய்தனர். விமானம் கனடாவின் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். ஒரு குழந்தை, 60 வயது ஆண், 40 வயது பெண் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். உயிரிழப்பு ஏதும் இல்லை என விமான நிலைய அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

விமான விபத்து

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவ சேவைகள் குழு தெரிவித்திருக்கிறது. இந்த விபத்துக்குப் பிறகு விமான நிலையம் இரண்டு மணி நேரத்திற்கு அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. அதன் பிறகே மீண்டும் விமான சேவை தொடங்கியது. விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரிய புலனாய்வாளர்கள் குழு விரைந்து விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்துவருகின்றனர்.

மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் ஸ்டேஷனிலேயே உயிரிழந்த சோகம்

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேசகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு கள்ளிக்குடி ர... மேலும் பார்க்க

மூணாறு: சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவியர், கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நாகர்கோவிலில் இருந்து கேரளா பதிவெண் கொண்... மேலும் பார்க்க

கோயில் விழாவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்; அலறிய பக்தர்கள் - 3 பேர் பலி... 32 பேர் காயம்!

கேரள மாநிலத்தில் கோயில் விழாக்களில் யானைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சுவாமி எழுந்தருளல், ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி மணக்க... மேலும் பார்க்க

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவாடி கிராமத்தில், சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, 'சத்யபிரபு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரி' எனும... மேலும் பார்க்க

விருதுநகர்: என்.ஹெச்சில் அடுத்தடுத்து விபத்து: வேடிக்கை பார்த்தவர் உட்பட 3 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). அப்பகுதியில் உள்ள பட்டாசு கம்பேனி ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், உறவினரிடம் பணம் வாங்... மேலும் பார்க்க