செய்திகள் :

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

post image

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.

பிப்ரவரி 20 அன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது இருவரும் சந்திப்பு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு தலைவர்களும் இருந்தனர்.

முன்னதாக இன்று தேசிய தலைநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சேதமடைந்த சாலைகளைச் சீர்செய்வது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் குப்தா ஒரு சந்திப்பை மேற்கொண்டார். அப்போது சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று பாஜகவின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தில்லியின் பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, பைரோன் மார்க் முதல் சராய் காலே கான், ரிங் ரோடு வரை துறையின் திட்டங்களை ஆய்வு செய்தார்.

தில்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அதிஷி, தில்லி அரசு பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்னும் நிறைவேற்றாதது குறித்து தனது கவலையைத் தெரிவித்து முதல்வர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதினார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி முதல்வரை சந்திக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க