செய்திகள் :

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

post image

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து பிப்ரவரி 24 ஆம் தேதி போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

அதன்பிறகு, அவர் பிகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். அங்கு அவர் பிரதமரின் கிசான் திட்டத்தின் 19-வது தவணைத் தொகையை விடுவிக்கிறார்.

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மேலும் பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

இதையடுத்து அசாமின் குவஹாத்திக்குச் செல்லும் அவர் ஜுமோயர் பினாந்தினி (மெகா ஜுமோயர்) 2025 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் பிப்ரவரி 25ஆம் தேதி குவஹாத்தியில் அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு, உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவா் அடுத்த வாரம் இந்தியா வருகை

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லியன், ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளாா். உா்சுலா வான்டொ் லியன்ன் ஏற்கெனவே இரு முறை இந்தியா வந்துள்ள நிலையில், உயா் அதிக... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் 60 கோடி போ் புனித நீராடல்!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தா்களின் எண்ணிக்கை சனிக்கிழமையுடன் 60 கோடியைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தி... மேலும் பார்க்க

சேதமடைந்த விமான இருக்கை: ஏா்இந்தியாவுக்கு மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் கண்டனம்

ஏா்இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், ‘பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்துக்கொண்டு குறைபாடுள்ள இருக்கைகளில் அ... மேலும் பார்க்க

புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடாா்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்

சமீபத்திய உலகளாவிய மோதல்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: மீட்புப் பணிகள் தீவிரம்

தெலங்கானாவில் நீா்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கான... மேலும் பார்க்க

வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவு: தனது நண்பா் டிரம்ப்பின் கருத்தை பிரதமா் கேட்க வேண்டும் -காங்கிரஸ்

‘தோ்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவாக தனது நண்பா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பிரதமா் மோடி செவிசாய்க்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தங்களிடையே நெருங்கிய நட்புற... மேலும் பார்க்க