செய்திகள் :

நாம் தமிழரிலிருந்து விலகலா? -காளியம்மாள் விளக்கம்

post image

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழா் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகவுள்ளதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இச்சூழலில் தூத்துக்குடி மணப்பாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘உறவுகள் சங்கமம்’ என்ற நிகழ்ச்சியின் அழைப்பிதழில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகா்களின் பெயா்கள் கட்சிப் பொறுப்புடன் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதில், காளியம்மாளின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஆனால், கட்சியில் அவா் வகிக்கும் பொறுப்பு எதுவும் இடம்பெறவில்லை. சமூக செயற்பாட்டாளா் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்சியிலிருந்து அவா் விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளாா்.

இதற்கிடையே, நாதக-வின் அம்பத்தூா் பேரவைத் தொகுதி துணைத் தலைவராக இருந்த முருகன், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதால், கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளாா்.

கேரள நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவன் தமிழகத்தில் கைது

கேரள நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவன் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்.கேரளத்தில் செயல்பட்டு வந்த நக்சல் இயக்கத்தின் தலைவன் சந்தோஷ் குமார் (45) தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில... மேலும் பார்க்க

பிரேக் பிடிக்காமல் தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து!

பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து, சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்தில் நல்வாய்ப்பாக 40 பயணிகள் உயிர்தப்பினர்.தமிழக - கேரளா எல்லைப் பகுதியான கோவை வேலந்தாவளம் பகுதிக்கு கோவை உக்கடம் ... மேலும் பார்க்க

தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்ற 550 படகுகளுடன் கச்சத்தீவு அருகே ... மேலும் பார்க்க

விராலிமலை அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி!

விராலிமலை: விராலிமலை அருகே சாலை நடுவே கொட்டப்பட்டிருந்த மண்ணுக்குள் இருசக்கர வாகனம் பாய்ந்து தலையில் பலத்த காயமடைந்து இளைஞர் நிகழ்விடத்திலேயே பலியானார்.விராலிமலை அடுத்துள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்த... மேலும் பார்க்க

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்!

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக பி. தர்மசெல்வனை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

செங்குன்றத்தில் கைப்பந்து விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கங்கை அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள மைதா... மேலும் பார்க்க