ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு
மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திரிவேணி சங்கம நீர் குளிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுப்பது போல, உத்தரப்பிரதேச அரசு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதாவது, அந்த ஆய்வின் முக்கியம்சம் என்னவென்றால், விஞ்ஞானி, தனது ஆய்வகத்தில் பல்வேறு இடங்களில் கங்கை நீரின் மாதிரிகள் கொண்டு வரப்பட்டு, நுண்ணோக்கி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன, அந்த ஆய்வின்படி, ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்த போதிலும், கங்கை நீரில் பாக்டீரியா வளர்ச்சியோ, நீரின் தூய்மை அளவோ குறைந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.