செய்திகள் :

கோயில் விழாவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்; அலறிய பக்தர்கள் - 3 பேர் பலி... 32 பேர் காயம்!

post image

கேரள மாநிலத்தில் கோயில் விழாக்களில் யானைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சுவாமி எழுந்தருளல், ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி மணக்குளங்கர பகவதி கோயில் திருவிழாவில் நேற்று இரவு யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு யானைக்கு மதம் பிடித்து மற்றொரு யானையை தந்தத்தால் குத்தியது. இதையடுத்து இரண்டு யானைகளும் மாறிமாறி ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. யானைகள் அங்கும் இங்கும் ஓடின. யானைகள் மோதிக்கொண்டதை அடுத்து அங்கிருந்த பொதுமக்களும் பயத்தால் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறினர். யானைகளுக்கிடையே சிக்கியும், பொதுமக்கள் பயந்து அங்கும் இங்கும் ஓடியதாலும் சுமார் 32 பேருக்கு காயம் ஏற்பட்டது.

கோயில் விழாவில் யானைகள் மோதல்

காயம் அடைந்தவர்கள் கோயிலாண்டி அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த 7 பேர் ஆபத்தான நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். இதற்கிடையே அம்முக்குட்டி (70), லீலா (65), ராஜன் ஆகியோர் யானைகள் மோதல் காரணமாக படுகாயம் ஏற்பட்டு மரணமடைந்தனர்.

யானைகள் மோதலால் சிதறி ஓடிய மக்கள்

யானைகள் சுமார் 45 நிமிடங்கள் மோதிக்கொணடன. பின்னர் பாகன்கள் யானைகளை ஒருவழியாக சமாதானம் செய்து கட்டினர். யானைகள் மோதிக்கொண்டதில் கோயில் அலுவலக கட்டடதின் ஒருபகுதி உடைந்தது. மேலும் அங்கிருந்த பொருள்கள் சேதம் அடைந்தன. யானைகள் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியான சம்பவம், கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவாடி கிராமத்தில், சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, 'சத்யபிரபு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரி' எனும... மேலும் பார்க்க

விருதுநகர்: என்.ஹெச்சில் அடுத்தடுத்து விபத்து: வேடிக்கை பார்த்தவர் உட்பட 3 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). அப்பகுதியில் உள்ள பட்டாசு கம்பேனி ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், உறவினரிடம் பணம் வாங்... மேலும் பார்க்க

கேரளாவை உலுக்கிய சாலை விபத்து - ஓராண்டுக்கு பிறகு கோவையில் சிக்கிய குற்றவாளி

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள வடகராவில்கடந்தாண்டு பிப்ரவரி மாதம், பேபி என்ற மூதாட்டியும் அவரின் 9 வயது பேத்தி த்ரிஷ்னாவும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த வழியே அதிவே... மேலும் பார்க்க

மும்பை: பன்றி என நினைத்துச் சுட்டதில் இருவர் பலி; மறைக்க முயன்ற மக்கள்; வசமாகச் சிக்கிய குற்றவாளிகள்

மும்பையின் மையப்பகுதியில் வனப்பகுதி இருக்கிறது. அதில் சிறுத்தைகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மும்பையையொட்டி இருக்கும் பால்கர் மாவட்டத்திலும் அதிக அளவில் வனப்பகுதி இருக்கிறது. இந்த வ... மேலும் பார்க்க

குன்னூர்: பற்றியெரிந்த குறிஞ்சி மலை... தீயை அணைக்க ராணுவத்தோடு கைகோத்த தீயணைப்பு வீரர்கள்!

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது உறைபனி தாக்கம் காணப்படுகிறது. வனப்பகுதிகளில் பசுமை குறைந்து வறட்சி தொடங்கியிருக்கிறது. உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. காட்டுத்தீ ... மேலும் பார்க்க