செய்திகள் :

மயிலாடுதுறை படுகொலை சம்பவத்துக்கு முன்பகைதான் காரணம்: காவல்துறை விளக்கம்!

post image

மயிலாடுதுறையில் சாராயம் விற்பனை செய்தவர்களை தட்டிக் கேட்டவரை தாக்கிய சம்பவத்தில் முன்விரோதம்தான் காரணம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து வந்த ராஜ்குமார், தினேஷ் இருவருக்கும் இடையில் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இருவருக்கும் வெள்ளிக்கிழமையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இந்தத் தாக்குதலில் ராஜ்குமாரின் கூட்டாளிகளும் உடன்சேர்ந்து தாக்கினர். அவர்களின் தாக்குதலில் இருந்து தினேஷை காப்பாற்ற ஹரிஷ், ஹரிசக்தி என்ற இளைஞர்கள் முன்வந்தனர்.

ஹரிஷ் மற்றும் சக்தி இருவருக்கும் ராஜ்குமாருடன் எந்தவிதத் தொடர்புமில்லை. இந்த நிலையில் ஹரிஷ், சக்தி இருவரையும் ராஜ்குமார் கூட்டாளிகள் கத்தியால் குத்தி, தாக்கினர். தாக்குதலில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட காரணத்தால் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், முன்பகை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் அதிகாரிகள் கூறினர்.

இதனையடுத்து, இளைஞர்களை கொலை செய்த ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இருப்பினும், சாராய வியாபாரிகளுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனையில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித... மேலும் பார்க்க

தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு!

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!

புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், ... மேலும் பார்க்க

தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் - முதல்வர்

தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண... மேலும் பார்க்க

சென்னையில் பிப்.17, 18-ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்: மாதா அமிர்தானந்தமயி வருகிறார்!

சென்னையில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் பிரம்மஸ்தான மஹோத்சவம் நடைபெறுவதையொட்டி, மாதா அமிர்தானந்தமயி தமிழகத்திற்கு வருகைதரவுள்ளார். மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையி... மேலும் பார்க்க

முதல்வருக்குதான் டப்பிங் தேவை; எங்களுக்கு இல்லை: அண்ணாமலை

முதல்வருக்குத்தான் டப்பிங் தேவை, எங்களுக்கு தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அமெரிக்காவை பொருத்தவரை டிரம்ப் ஒரு விஷயத்தை சொல்லி மக்களின் ... மேலும் பார்க்க