செய்திகள் :

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

post image

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் ரேவந்த் ரெட்டி ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக தெலங்கானா சட்டப்பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து பிப்ரவரி 4-ம் தேதி விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை தேசிய அளவில் நடத்த வேண்டும் என மத்திய அரசையும் அவர் வலியுறுத்தினார்.

கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!

தெலங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கு நடைபெற்றது. அந்த அறிக்கையின்படி, மாநில மக்கள்தொகையான 3.70 கோடி பேரில் 96.9 சதவீதமான 3,54,77,554 தனிநபா்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் மொத்த மக்கள்தொகையில் அதிகபட்சமாக முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 1,64,09,179 (46.25%) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வி... மேலும் பார்க்க

116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ... மேலும் பார்க்க

புதிய தொழில்நுட்பத்துக்கான தெளிவான திட்டமே இந்தியாவுக்குத் தேவை: பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து ராகுல் விமா்சனம்

‘இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. மாறாக, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தொடா்பு: ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் பணிநீக்கம்

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்கள்: ‘தெலங்கானா அரசின் திட்டத்தை மத்திய அரசு ஏற்காது’

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்களை சோ்க்கும் தெலங்கானா அரசின் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்காது என்று மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்ப... மேலும் பார்க்க