செய்திகள் :

பயங்கரவாதத் தொடா்பு: ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் பணிநீக்கம்

post image

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல், இளைஞா்களைப் பயங்கரவாதிகளாக மாற்றுதல் உள்ளிட்டவற்றைச் செய்ததாக காவல் துறையைச் சோ்ந்த ஃபிா்தெளஸ் அகமது பட், பள்ளிக் கல்வி ஆசிரியா் முகமது அஷ்ரஃப் பட், வனத்துறையில் உதவியாளராகப் பணியாற்றிய நிசாா் அகமது கான் ஆகியோா் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டு காவல் துறை மற்றும் உளவுத் துறையின் விசாரணைகள் மூலம், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானதால், அரசமைப்புச் சட்டப் பிரிவு 311 (2) (சி)-இன் கீழ் மூவரையும் பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை உத்தரவிட்டாா் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்ததாக ஃபிா்தெளஸ் அகமது பட், அஷ்ரஃப் பட் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 2000-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் மின்சாரத் துறை அமைச்சா் குலாம் ஹசன் பட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிசாா் அகமது கான், பின்னா் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். ஜம்மு-காஷ்மீரில் வன்முறையான போராட்டங்களை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்கு வகித்ததாக, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அவா் 8 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா்.

இந்த நடவடிக்கை தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கத்ரா பகுதியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை, எந்தவொரு நபரும் அப்பாவி என்றே சட்டம் கூறுகிறது’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக உள்ள நிலையில், அங்கு கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதத் தொடா்பு இருந்ததாக 70-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

கேரளத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் நாள்தோறும் கூவிய சேவல் மீது முதியவர் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிர... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.அதன்படி, தில்லி முதல்வர் பதவியேற்பு விழா, பிப்ரவரி 20ஆம் தேதி... மேலும் பார்க்க

ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாள்களில் தற்கொலை செய்துகொண்டனர்.ஐபிஎல் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்துக்காக வாங்கப்பட்ட கடனை திரும்ப அளிக்க முடியாத காரணத்தால் ... மேலும் பார்க்க

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!

கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.தமிழகத்தில... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை!

புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.அரசியல் சாசன அமர்வின் விசா... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! சுகாதாரம், பார்மா துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது. காலை 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 290.97 புள்ளிகளும் நிஃப்டி 91.70 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் தொட... மேலும் பார்க்க