செய்திகள் :

குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

post image

சென்னை: அரசின் மீது குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

தமிழ்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 171 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சாமிநாத ஐயர் திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

தமிழ்தாத்தா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய உ.வே.சா-வின் 171 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரின் ஆணைக்கிணங்க இந்த ஆண்டு முதல் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படுகிறது.

இதில் நிதித்துறை அமைச்சர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு மரியாதை செய்திருப்பது பாராட்டுக்குரியது.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் எனவும் அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு முதன் முதலாக கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் விதமாக மாநில கல்லூரியில் பட்டிமன்றம் பேச்சுப் போட்டியில் என பல நடக்க இருக்கிறது என தெரிவித்தார்.

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

இனி ஆண்டுதோறும் உ.வே.சா பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் என்ன தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகம் இருந்தும், அவா் பெயரில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு இருக்கை இல்லை என ஆளுநர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ஆளுநர் அரசுக்கு ஆலோசனையோ அல்லது சுட்டிக்காட்டுவது போல் இருந்தால் அதிகாரிகளின் மூலமாகவோ அல்லது குறிப்பு மூலமாக வழங்க வேண்டும். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறுவது போல் உள்ளது. இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என தெரிவித்தார்.

தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ‘தமிழ், தமிழ்’ என்று பேசுகிறவா்கள், தமிழருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எந்தச் சேவையையும் இதுவரை செய்யவில்லை என ஆளுநர் ரவி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழ... மேலும் பார்க்க

பிப். 25-ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

வருகிற பிப். 25 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகைதரும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிர... மேலும் பார்க்க

சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மூத்த மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்! - மனித உரிமைகள் ஆணையம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2019-ல் திருவண்ணாமலையைச் சேர்ந... மேலும் பார்க்க

திருமுல்லைவாயல் தனியார் ஆலையில் தீ விபத்து! அருகிலுள்ள பள்ளிக்கும் தீ பரவியது!

திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தனியார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் சுதர்சன் நகர் பகுதியில் வண்ணப்பூச்சுகளுக்கு பயன்படும் தின்னர் தயாரிக்கும் ஆலை இயங... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: வெளிமாநிலத்தவர் நிலம் வாங்குவதற்கு தடை!

புது தில்லி: பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை விதிக்கும் புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.உத்தரகண்ட்... மேலும் பார்க்க

கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும், தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவித்திட உரிய ந... மேலும் பார்க்க