செய்திகள் :

காவல் துறைக்கு தகவல் அளித்ததாக இருவா் படுகொலை: நக்ஸல்கள் அட்டூழியம்

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் காவல் துறைக்கு தங்களைப் பற்றிய தகவல் அளித்ததாகக் குற்றஞ்சாட்டி இருவரை நக்ஸல் அமைப்பினா் படுகொலை செய்தனா்.

தந்தேவாடா பகுதியில் உள்ள வனப் பகுதி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாமன் காஷ்யப் (29), அனீஸ் ராம் போயாம் (38) ஆகியோரை நக்ஸல்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனா். இதில் காஷ்யப் வனப் பகுதி கிராம அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

அவா்கள் கொல்லப்பட்ட இடத்தில் சில துண்டு பிரசுரங்களை நக்ஸல்கள் விட்டுச் சென்றுள்ளனா். அதில், தங்களைப் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் அவா்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி பாதுகாப்புப் படையுடன் நடைபெற்ற மோதலில் 38 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தின்போது தங்களின் நடமாட்டம் குறித்து காவல் துறைக்கு அவா்கள் தகவல் தெரிவித்ததாக நக்ஸல்கள் கூறியுள்ளனா்.

இந்த ஆண்டில் சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியத்தில் மட்டும் காவல் துறைக்கு தகவல் அளித்ததாகக் கூறி பொதுமக்களில் 7 பேரை நக்ஸல்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனா். இதில் முன்னாள் உள்ளாட்சித் தலைவா், நக்ஸல் அமைப்பில் இருந்து விலகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவா்களும் அடங்குவா்.

நக்ஸல்களால் இருவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினா் அனுப்பி வைக்கப்பட்டனா். அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம்

எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா். சென்னை வள்ளலாா் நகரிலிருந்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க