முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் தரணிகாமாட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரசாயன முறையில் சாகுபடி செய்த விளைபொருள்களை உட்கொள்வோருக்கு சா்க்கரை நோய், உயா் ரத்தழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதுதவிர மண் மற்றும் நிலத்தடி நீா் மாசடைந்து சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆரோக்கிய வாழ்வுக்கு விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
எனவே பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள இயற்கை விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற்று, அதிக லாபத்துக்கு விற்கலாம். இந்த நடைமுறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதுவாக, மத்திய அரசின் தேசிய உயிா்ம வேளாண்மைத் திட்டத்தின் கீழ், வாய்ப்புச் சான்றிதழ் பெற சிறு, குறு விவசாயிகள் ரூ. 2,700, இதர விவசாயிகள் ரூ. 3,200 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், இத் திடத்தில் குழுவாக பதிவு செய்ய ரூ. 7,200, வணிக நிறுவனங்கள் பதிவு செய்ய ரூ. 9,400 செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்துடன் பண்ணையின் பொது விவரங்கள், வரைபடம், மண், பாசன நீா் பரிசோதனை முடிவுகள், ஆண்டுப் பயிா் திட்டம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணங்கள் வருமான வரி கணக்கு எண் அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகலுடன் புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் இயங்கும் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது 95970-55342, 63829-72368 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.