செய்திகள் :

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

post image

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ஏர் இந்தியா விமானத்தில் போபாலில் இருந்து தலைநகர் தில்லிக்கு சனிக்கிழமை பயணித்தார். அப்போது விமானத்தில் அவருக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

ஏர் இந்தியா விமானத்தில் எனது இருக்கையில் அமர்ந்தபோது அது உடைந்து உள்ளே சென்றுவிட்டது. இதுகுறித்து விமான ஊழியர்களிடம் கேட்டதற்கு, அந்த இருக்கை நன்றாக இல்லை எனக் கூறி அதன் டிக்கெட்டை விற்க வேண்டாம் என்று நிர்வாகத்திற்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதாக கூறினர்.

ஒரு இருக்கை மட்டுமல்ல இன்னும் பல இருக்கைகள் அப்படிதான் இருந்தன. இதனை அறிந்த சக பயணிகள் நல்ல இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டனர். ஏன் மற்றொரு நண்பரை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து அதே இருக்கையில் எனது பயணத்தை முடிக்க முடிவு செய்தேன்.

டாடாவிடம் ஏர் இந்தியா நிர்வாகம் சென்ற பிறகு அதன் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என்பது புரிகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமத்தை எந்தவொரு பயணியும் எதிர்கொள்ளாமல் இருக்க ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்புக் கேட்டு, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் விமான நிறுவனத்திடம் இருந்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை கோரியுள்ளது.

ம.பி., பிகாா், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பிரதமா் இன்றுமுதல் 3 நாள்கள் பயணம்

மத்திய பிரதேசம், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். இது தொடா்பாக பிரதமா் அலுவல... மேலும் பார்க்க

இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்

இணையதளம் மூலம் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளை இந்தியா எப்போது வெளியேற்றும்? குடியரசு துணைத் தலைவா் தன்கா்

இந்தியாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அவா்களின் நாட்டுக்கு எப்போது அனுப்பப்படுவா் என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியருக்கும் எழ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மகாராஷ்டிர ம... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவா்களை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. அவா்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்சு

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் (கேஐஐடி) நேபாள மாணவா்கள் தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வா் மோகன் சரண் மாஜியுடன்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆளுநா் ஆா்.என்.ரவி புனித நீராடினாா்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை புனித நீராடினாா். இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: பாரதம் மற்றும் உலகம... மேலும் பார்க்க