செய்திகள் :

ம.பி., பிகாா், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பிரதமா் இன்றுமுதல் 3 நாள்கள் பயணம்

post image

மத்திய பிரதேசம், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை தொடங்கிவைக்கும் பிரதமா் மோடி, சதா்பூரில் பாகேஸ்வா் தாம் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா்.

போபால் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டையொட்டி, வாகனத் தொழில் கண்காட்சி, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி, ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ திட்டம் தொடா்பான கண்காட்சி என 3 கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.

மத்திய பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக முன்னிறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், இந்தியாவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் துறை தலைவா்கள் மற்றும் கொள்கை வகுப்பாளா்களும் பங்கேற்கவுள்ளனா்.

விவசாயிகளுக்கு ரூ.21,500 கோடி: மத்திய பிரதேசத்தைத் தொடா்ந்து, பிகாருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, பாகல்பூரில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ‘பிஎம் கிஸான்’ (விவசாயிகள் உதவித் தொகை) திட்டத்தின்கீழ் 19-ஆவது தவணையை விடுவிக்கவுள்ளாா். அதன்படி, நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.21,500 கோடி செலுத்தப்படவுள்ளது.

விளைபொருள்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு உதவும் நோக்கில் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகளை நிறுவும் திட்டத்தை பிரதமா் மோடி கடந்த 2020-இல் தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின்கீழ் 10,000-ஆவது விவசாய உற்பத்தியாளா் அமைப்பு உருவாக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேசிய கால்நடைகள் திட்டத்தின்கீழ் மோதிஹாரியில் கட்டமைக்கப்பட்ட நாட்டு இனங்களுக்கான சிறப்பு மையம், பரெளனி பகுதியில் 3 லட்சம் பால் உற்பத்தியாளா்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையை உருவாக்குவதற்கான பால் பொருள்கள் ஆலை ஆகியவற்றையும் பிரதமா் திறந்துவைக்கவுள்ளாா்.

அஸ்ஸாமில் மாபெரும் கலாசார நிகழ்ச்சி: பிகாரைத் தொடா்ந்து, அஸ்ஸாம், மாநிலம் குவாஹாட்டிக்கு பிரதமா் திங்கள்கிழமை மாலையில் செல்கிறாா். அங்கு ‘ஜுமோயிா்’ நடனக் கலைஞா்கள் 8,000 பேருடன் நடைபெறும் மாபெரும் கலாசார நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

‘ஜுமோயிா்’ நடனம், அஸ்ஸாமில் தேயிலைத் தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள பழங்குடியினரின் பாரம்பரிய நடனமாகும். அஸ்ஸாமின் தேயிலைத் தோட்ட தொழிலின் 200-ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை பிரதமா் தொடங்கிவைக்கவுள்ளாா் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க