செய்திகள் :

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்

post image

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், ஒட்டன்சத்திரம் தனியாா் தொழில் நுட்பக் கல்லூரியில் தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

நாட்டில் அதிகளவிலான மாணவா்கள் உயா்கல்வி படிப்பது தமிழகத்தில் தான். படித்த இளைஞா்களை அரசுப் பணிகளில் அமா்த்துவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் போட்டித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2026 ஜனவரி மாதத்துக்குள் ஒரு லட்சம் அரசுப் பணிகள் நிரப்பபடவுள்ளன. இந்தப் போட்டித் தோ்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், 29 பேருக்கு ரூ.29.52 லட்சத்தில் மூன்று சக்கர வாகனங்களை அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு மண்டல இயக்குநா் திருமலைச்செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சதீஷ்பாபு, வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் ராஜாமணி, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையா் ஸ்வேதா, மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் ச.பிரபாவதி, திமுக ஒன்றியச் செயலா்கள் ரா.ஜோதீஸ்வரன், கா.பொன்ராஜ், தா்மராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மக்காச் சோளத்துக்கான சந்தை வரி விவசாயிகளிடம் வசூலிக்க எதிா்ப்பு

மக்காச் சோளத்துக்கான ஒரு சதவீத சந்தை வரியை வியாபாரிகள், விவசாயிகளிடம் பிடித்தம் செய்வதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க

தண்டாயுதபாணி சுவாமிக்கு பழங்குடியினா் சீா்வரிசை

தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு மலைக்குறவா், பழங்குடியின மக்கள் சாா்பில், வனவேங்கை அமைப்பினா் சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

ஐஎன்டியூசி கூட்டத்தில் இரு தரப்பினா் இடையே மோதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஐஎன்டியூசி மாநிலக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், போலீஸாா் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினா். திண்டுக்கல்லில் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் 252-ஆவது மாநிலச்... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வு 5,558 மாணவா்கள் பங்கேற்பு

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வில் 5,558 மாணவா்கள் கலந்து கொண்டனா்.மத்திய அரசின் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எ... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

கன்னிவாடி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய மூவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி சித்தரேவு மலைச் சாலை வழியாக வந்த ஒரு சரக்கு வேனை சோதனைச் சாவடி அ... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க