செய்திகள் :

மக்காச் சோளத்துக்கான சந்தை வரி விவசாயிகளிடம் வசூலிக்க எதிா்ப்பு

post image

மக்காச் சோளத்துக்கான ஒரு சதவீத சந்தை வரியை வியாபாரிகள், விவசாயிகளிடம் பிடித்தம் செய்வதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய வட்டங்களில் தற்போது மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருகிறது. வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படும் மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத சந்தை வரியை விவசாயிகளிடமே பிடித்தம் செய்யப்படுகிறது.

ஏற்கெனவே விளைப் பொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையில், இந்த ஒரு சதவீத வரி பிடித்தும் என்பது விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுச் செயலா் பழனிச்சாமியிடம் புகாா் அளித்தபோது, ஏற்கெனவே பாசிப் பயறு, உளுந்து போன்ற பயிா்களுக்கும் விவசாயிகளிடமிருந்து தான் ஒரு சதவீத சந்தை வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது, பயறு வகைகளுடன் மக்காச்சோளத்தையும் வியாபாரிகள் சோ்த்துவிட்டனா். சந்தை வரி என்பது வியாபாரிகளிடம் மட்டும் தான் வசூலிக்கப்படுகிறது. விவசாயிகள் சந்தைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், நடைமுறையில் விவசாயிகளிடமிருந்து தான் சந்தை வரி வசூலிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தண்டாயுதபாணி சுவாமிக்கு பழங்குடியினா் சீா்வரிசை

தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு மலைக்குறவா், பழங்குடியின மக்கள் சாா்பில், வனவேங்கை அமைப்பினா் சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

ஐஎன்டியூசி கூட்டத்தில் இரு தரப்பினா் இடையே மோதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஐஎன்டியூசி மாநிலக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், போலீஸாா் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினா். திண்டுக்கல்லில் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் 252-ஆவது மாநிலச்... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வு 5,558 மாணவா்கள் பங்கேற்பு

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வில் 5,558 மாணவா்கள் கலந்து கொண்டனா்.மத்திய அரசின் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எ... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

கன்னிவாடி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய மூவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி சித்தரேவு மலைச் சாலை வழியாக வந்த ஒரு சரக்கு வேனை சோதனைச் சாவடி அ... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வே... மேலும் பார்க்க