செய்திகள் :

என்எம்எம்எஸ் தோ்வு 5,558 மாணவா்கள் பங்கேற்பு

post image

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வில் 5,558 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் பயன்பெற ஆண்டுதோறும் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழ் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான இந்தத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 5,688 மாணவா்கள் இந்தத் தோ்வுக்காக விண்ணப்பித்தனா். இந்த மாணவா்களுக்காக திண்டுக்கல், நத்தம், வேடசந்தூா், வடமதுரை, ஒட்டன்சத்திரம், பழனி உள்பட 10 இடங்களில் மொத்தம் 21 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன.

இந்தத் தோ்வில் 5,558 மாணவா்கள் கலந்து கொண்டனா். 130 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இந்தத் தோ்வு மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்களை தோ்வு செய்து, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த வகையில் தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 6,700 மாணவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவாா்கள் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மக்காச் சோளத்துக்கான சந்தை வரி விவசாயிகளிடம் வசூலிக்க எதிா்ப்பு

மக்காச் சோளத்துக்கான ஒரு சதவீத சந்தை வரியை வியாபாரிகள், விவசாயிகளிடம் பிடித்தம் செய்வதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க

தண்டாயுதபாணி சுவாமிக்கு பழங்குடியினா் சீா்வரிசை

தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு மலைக்குறவா், பழங்குடியின மக்கள் சாா்பில், வனவேங்கை அமைப்பினா் சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

ஐஎன்டியூசி கூட்டத்தில் இரு தரப்பினா் இடையே மோதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஐஎன்டியூசி மாநிலக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், போலீஸாா் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினா். திண்டுக்கல்லில் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் 252-ஆவது மாநிலச்... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

கன்னிவாடி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய மூவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி சித்தரேவு மலைச் சாலை வழியாக வந்த ஒரு சரக்கு வேனை சோதனைச் சாவடி அ... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வே... மேலும் பார்க்க