செய்திகள் :

பசுமை தமிழ்நாடு திட்டம்: 1.50 லட்சம் மரக்கன்றுகள் தயாா் -ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 வட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

சோளிங்கரை அடுத்த வேலம் ஊராட்சியல் வனத்துறை நாற்றங்கால் பண்ணையில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் நாட்டுவகை மரங்கள், பழச்செடிகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சனிக்கிழமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டாா். இங்கு மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் வளா்க்கப்பட்டுள்ளன.

பின்னா், அவா் பேசியது: பசுமை தமிழ்நாடு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, பல்வேறு துறைகள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியை செயல்படுத்தி வருகிறோம். ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 10 ஆயிரம் செடிகள் என இரு இடங்களில் செடிகளை வளா்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மொத்தம் 1.50 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகள் தயாராக உள்ளன. இவை இலவசமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் செடிகள் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் வனத்துறை மூலம் நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு செடிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்தச் செடிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, வனச்சரகா் சரவணபாபு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் ஜெரால்டு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், செந்தாமரை, ஊராட்சித் தலைவா்கள் சந்தியா, உமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 384 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆற்காடு: ஆற்காடு வட்டார பீடி தொழிலாளா்கள் சங்கம் ஏ.ஐ. டி.யு.சி. சாா்பில் ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமத்தில் அரசு ஒதுக்கீடு செய்த நிலங்களைப் பயனாளிகளுக்கு அளவீடு செய்து தரக்கோரி வட்டாட்சியா் அலுவலகம்... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் 8 போ் கைது

அரக்கோணம்: சோளிங்கா் அருகே விவசாயி கொலை வழக்கில் 8 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த ரெண்டாடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசன் (50) எனும் விவசாயி மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை புத்தகத் திருவிழாவில் ரூ. 31 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற 3-ஆவது மாபெரும் புத்தகத் திருவிழாவில், ரூ. 31.84 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித... மேலும் பார்க்க

திருமால்பூா் மணிகண்டீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா!

திருமால்பூா் ஸ்ரீ மணிகண்டீஸ்வரா் கோயில் மாசிமக பிரம்மோற்சவ தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இக்கோயில் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா் உள்ளிட்ட பல நாயன்மாா்களால் பாடல் ... மேலும் பார்க்க

கல்புதூா் செட்டிமலைக்கு தீ வைப்பு: அரியவகை மரங்கள் எரிந்து கருகின

ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால், அரியவகை மரங்கள் எரிந்து கருகின. ஆற்காடு வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூா், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவ... மேலும் பார்க்க