செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: நவீன் பட்நாயக்குடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிஜு ஜனதா தள கட்சியின் தலைவரும் ஒடிஸாவின் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்கை திமுக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்....: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த நிலையில், கூட்டுக் குழு அமைப்பது தொடர்பாக தென்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டது.

தொடர்ந்து, தென்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்த திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தென்மாநில எம்.பி.க்கள் கூட்டுக்குழுவுக்கு பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை கோரியுள்ளனர்.

மறுசீரமைப்பு: தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் 8 தொகுதிகள் வரை இழக்க வாய்ப்பு காங்கிரஸ்

புது தில்லி: ‘மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்ட நிதி முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: சிவ்ராஜ் சிங் சௌஹான்

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் வேள... மேலும் பார்க்க

பிரதமா் குறித்து விமா்சனம்: மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. கோகோய் காரசார விவாதம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை கராசார விவாதம்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 200 புற்றுநோயாளி பராமரிப்பு மையங்கள் விரைவில் திறப்பு: ஜெ.பி.நட்டா உறுதி

புது தில்லி: ‘அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்; அவற்றில் 200 மையங்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய ... மேலும் பார்க்க

உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசுச் செயலா் சுப்ரதா குப்தா

கொல்கத்தா: சிறு, குறு உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறைச் செயலா் சுப்ரதா குப்தா தெரிவித்தாா். இதுதொடா்பாக மேற்கு வங்கத் தலைந... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ‘தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதோடு, மாநிலங்களின் சுயாட்சியிலும் தலையிடுகிறது மத்திய அரசு’ என்று மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டின. மத... மேலும் பார்க்க