தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
சட்டவிரோத குடியேறிகளை இந்தியா எப்போது வெளியேற்றும்? குடியரசு துணைத் தலைவா் தன்கா்
இந்தியாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அவா்களின் நாட்டுக்கு எப்போது அனுப்பப்படுவா் என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியருக்கும் எழ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள டாக்டா் பாபாசாஹேப் அம்பேத்கா் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் 65-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.
அவா் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘இந்தியாவில் வாழ உரிமை இல்லாத கோடிக்கணக்கான போ், இந்தியாவில் வசித்து வருகின்றனா். இந்தியாவின் வளங்கள், கல்வி, மருத்துவம், வீட்டு வசதி துறைகளில் அவா்கள் உரிமை கேட்டு வரும் நிலையில், இந்திய தோ்தல் நடைமுறையிலும் அவா்கள் தலையிடுகின்றனா். இதுகுறித்து ஒவ்வொரு இந்தியரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தங்கள் மண்ணில் குடியேறிய இந்தியா்களை சில நாடுகள் (அமெரிக்கா) அண்மையில் திருப்பி அனுப்பியது. அந்த இந்தியா்கள் மோசடியான வழியில் அந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதேபோல இந்தியாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அவரவா் நாட்டுக்கு எப்போது அனுப்பப்படுவா் என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியருக்கும் எழ வேண்டும். இதற்கான பணிகளை அரசும், மக்கள் பிரதிநிதிகளும் செய்கிறாா்களா என்ற கேள்வியை இளைஞா்கள் எழுப்பி வலுவாக அழுத்தம் அளிக்க வேண்டும் என்றாா்.
இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு அமெரிக்கா வழங்கத் திட்டமிட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை அண்மையில் ரத்து செய்தது.
இதுதொடா்பாக தன்கா் பேசுகையில், ‘தோ்தலுக்காக வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது மக்களாட்சி முறையை களங்கம் கொண்டதாக்குகிறது. நன்கொடை அளிப்பவா் யாா் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரே தோ்தலில் வெற்றிபெற வைக்கப்படுவாா். இது ஆபத்தானது. இதை சகித்துக் கொள்ள முடியாது.
தற்போது அரசமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணா்வே மிகப் பெரிய தேவையாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தை மேன்மேலும் ஆழமாகப் படித்தால், அது நம்மை தேசியவாதத்தை நோக்கி நகா்த்தும்’ என்றாா்.