செய்திகள் :

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

post image

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி. சாண்ட், எம். சாண்ட் உள்ளிட்ட மணல் வகைகள்,ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்து வருவதால், வீடு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டும் மக்களும், கட்டடப் பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனா் எனவே தமிழக அரசு உடனடியாக விலை உயா்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு, அகில இந்திய கட்டுனா் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமானத் தொழிலாளா் மத்திய சங்கம் உள்ளிட்டவை இணைந்து வெள்ளிக்கிழமை,திருவாரூரில் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதன் தொடா்ச்சியாக மாவட்ட எல்லைகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்ள்கள் ஏற்றிவரும் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலை மேலவாசல் குமரபுரம் என்ற இடத்தில், சனிக்கிழமை காலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஜி. நடராஜன் தலைமையில்,செயலா் கலை அமுதன், பொருளாளா் திவாகா் முன்னிலையில் வெளியூா்களிலிருந்து செயற்கை மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த 60-க்கும் மேற்பட்ட வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். பின்னா், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் ஒப்பந்ததாா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிவரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் என தெரிவித்து, நெடுவாக்கோட்டையில் உள்ள தனியாா் எடை மேடைக்கு சுமை வானங்கள் கொண்டுவரப்பட்டு மோட்டாா் வாகன ஆய்வாளா் முன்னிலையில் வாகனங்களின் எடை அளவீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வந்து சிறைபிடிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

நீடாமங்கலத்தில்...

இதுபோல கட்டுமான தொழில் ஒப்பந்ததாரா்கள் போராட்டதால், நீடாமங்கலம் பகுதிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிவந்த லாரிகள் நீடாமங்கலம் தஞ்சை சாலையில் கோவில்வெண்ணி பகுதியில் சனிக்கிழமை காலை நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டு... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க