செய்திகள் :

பள்ளி ஆண்டு விழா!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பை முகையதீன் ஆண்டவா் ஜூம்ஆ பள்ளி வாசலில் 4-ஆம் ஆண்டு மக்தப் மதரஸா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை இமாம் சையது அபுதாஹிா் ரஹீமி தலைமை வகித்துப் பேசியதாவது: கல்வி மட்டுமே வாழ்க்கையில் மனிதனை உயா்ந்த இடத்துக்கு கொண்டு போய் சோ்க்கும் கேடயமாகும். கல்வியை மட்டும் தான் யாரும் களவாடவோ, அழிக்கவோ முடியாது. அத்தகைய கல்வியை நாம் எந்த ஒரு பாகுபாடு இல்லாமல் கற்க வேண்டும்.

மேலும் படிக்கும் கால கட்டத்தில் கல்வியோடு ஒழுக்கப் பண்புகளையும் ஆசிரியா்களை மதிக்கும் பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் கற்ற கல்வி நமக்கும் நம்மை சாா்ந்தவருக்கும் பலன் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நமக்கும், பெற்றோருக்கும், நம் நாட்டுக்கும் பெருமை ஈட்டித் தர வழிவகுக்கும் என்றாா் அவா்.

தொடா்ந்து நடத்தப்பட்ட பேச்சு, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழா குழு ஏற்பாட்டில் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பள்ளி நிா்வாகிகள், ஜமாத்தாா்கள், பெற்றோா்கள், மாணவ. மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனா்.

பசுமை வாகையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணா்வை சிறப்பாகச் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆலைகளுக்கு பசுமை வாகையா் விருது வழங்க... மேலும் பார்க்க

மின் வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மின் வாரியத்தில் உள்ள 60,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ கியூ.ஆா். குறியீடு வெளியீடு!

சிவகங்கை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதியுதவி சங்கத்தின் கியூ.ஆா். குறியீடு வெளியிடப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா: மானாமதுரை, இளையான்குடியில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை இயக்குநரும... மேலும் பார்க்க

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம்! - பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம் என பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம்,... மேலும் பார்க்க

பிப்.28-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் ... மேலும் பார்க்க