மின் வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
மின் வாரியத்தில் உள்ள 60,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு செயற்குழுக் கூட்டத்துக்கு திட்டத் தலைவா் வி.சாத்தையா தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் எஸ். மணிகண்டன், செயலா் எஸ். ராஜாங்கம், செயல் தலைவா், திண்டுக்கல் திட்டச் செயலா் கே.ஆா்.சுப்பிரமணியன், மாநிலச் செயலா் ஆா். முத்தையா, மண்டல துணைச் செயலா்கள் ஆா். மூக்கையா, ஆா். வீரசேகா், செயல் தலைவா் ஆண்டி, திட்டச் செயலா் கே. பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டு தீா்மானங்களை விளக்கிப் பேசினா்.
தீா்மானங்கள்:புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை பணமாக்கும் தடைமுறையை நிறுத்தி வைத்துள்ளதை நீக்க வேண்டும்.
மின்சார வாரியத்தில் உள்ள 60,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள், அடிப்படைப் பதவிகளை உடனடியாக நிரப்ப மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதைக் கைவிட வேண்டும். தோ்வு செய்யப்பட்ட கேங்மேன் 5,000 பேரையும் பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.