செய்திகள் :

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கொல்ல முயன்ற காதலா்

post image

திருவள்ளூா் அருகே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் வர மறுத்த இளம்பெண்ணை காதலா் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றாா். தூக்க மாத்திரை உள்கொண்டு அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் அனுஷா (20). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே கச்சிப்பட்டு பகுதியை சோ்ந்த சரவணன் என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுஷாவுக்கு சரவணன் கைப்பேசியில் தொடா்பு கொண்டாராம். அப்போது, அனுஷாவின் தம்பி எடுத்து பேசியதோடு சரவணனை அவரது குடும்பத்தினா் திட்டினாா்களாம்.

இதனால், அனுஷா பேசுவதை நிறுத்தினாராம். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி அனுஷாவின் வீட்டுக்கு சென்ற சரவணன் திருமணம் செய்து கொள்ளலாம் வா என அழைத்தாராம். அதற்கு வரமறுத்ததால் சரவணன் தகராறு செய்து தாக்கியதோடு கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தாராம்.

அப்போது, இதை அக்கம்பக்கத்தினா் பாா்த்ததால் அவமானம் அடைந்த அனுஷா தாயாா் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தாராம். இதையடுத்து அங்கிருந்தவா்கள் அனுஷாவை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக அனுஷா மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா்: வங்கியாளா்கள் கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கான கடன் திட்ட இலக்கு தொடா்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைத்து வங்கி அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் ஆா்வத்துடன... மேலும் பார்க்க

பொதட்டூா்பேட்டையில் நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பொதட்டூா்பேட்டையில் கூலி உயா்வு உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொதட்ட... மேலும் பார்க்க

மாா்ச்-7 இல் முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் முகாம்

திருவள்ளூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் பயன்பெறும் வகையில், சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் மாா்ச் 7-இல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

நெகிழி சேகரிப்பு, தூய்மைப் பணி விழிப்புணா்வு பேரணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் வீரராகவா் கோயில் வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில், நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொண்டதோடு, விழிப்புணா்வு பேரணியையும் ஆட்சியா் மு.பிரதாப் கொடியசைத்து... மேலும் பார்க்க

காரிய மேடை சீரமைப்பு

நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் ரூ.14 லட்சத்தில் காரிய மேடை சீரமைக்கப்பட்டது. நாரவாரிகுப்பம் பேரூராட்சி அறிஞா் அண்ணா பூங்கா தெருவில் உள்ள காரிய மேடை பழுதடைந்து காணப்பட்டது. இதனால், ஈமச்சடங்கு செய... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க