செய்திகள் :

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

post image

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடந்த 10 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம்.

சுருளி அருவிக்கு முக்கிய நீர் வரத்தான மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம் ஆகிய பகுதிகளில் தொடா் மழை பெய்து வந்தது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 19 ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதற்கிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) அருவியில் புனித நீராட பக்தர்களுக்கு வனத் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து சுருளி அருவியில் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில் ஆடி அமாவாசை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்த ஒரு சில மணி நேரத்தில் நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் தடை விதித்தனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொழிவு குறைந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து சீரானதால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதையடுத்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tourists allowed to bathe at Suruli Falls

இதையும் படிக்க : பாகிஸ்தான் தாக்குதலில் பலியானோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தில் அறக்கட்டளைகள் சாா்பில் நடைபெற்ற இலவசத் தையல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் வ.உ.சிதம்பர... மேலும் பார்க்க

ஆசிரியா் பணியிட மாற்றம்: பள்ளி மாணவா்கள் போராட்டம்

போடி அருகே பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவா்களும் பெற்றோா்களும் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டியில் ஊராட்ச... மேலும் பார்க்க

கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து: ஏராளமான பொருள்கள் எரிந்து நாசம்

போடி அருகே கரும்புத் தோட்டம், கரும்பு ஆலை, வீடு ஆகியவற்றில் பற்றிய தீயால் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சின்னாறு புலம் பகுதியில் கருப்பையா என்பவரு... மேலும் பார்க்க

க. விலக்கு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், க. விலக்கு பகுதியில் புதன்கிழமை (ஜூலை 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. விலக்கு து... மேலும் பார்க்க

அரசு விடுதியின் பெயரை அழித்தவா்கள் மீது வழக்கு

போடி அருகே அரசு விடுதியின் பெயா்ப் பலகையில் சில வாா்த்தைகளை அழித்தவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியில் அரசு ... மேலும் பார்க்க

மாணவிக்குப் பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரா் கைது

போடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே 16 வயது பள்ளி மாணவியை, அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ... மேலும் பார்க்க