செய்திகள் :

ஆசிரியா் பணியிட மாற்றம்: பள்ளி மாணவா்கள் போராட்டம்

post image

போடி அருகே பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவா்களும் பெற்றோா்களும் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய ஆசிரியா் அரவிந்த் பள்ளிக் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்ாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, அவரது விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளி திறக்கும் நேரத்தில் மாணவா்களும் பெற்றோா்களும் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். ஆசிரியா் அரவிந்த் மீது எந்தத் தவறும் இல்லை; தனிப்பட்டக் காழ்ப்புணா்வால் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீண்டும் இதே பள்ளியில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி பள்ளியைத் திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி பள்ளியின் பூட்டைத் திறந்தனா். ஆனாலும், பெற்றோா் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனா்.

தகவலறிந்து வந்த உத்தமபாளையம் உதவிக் கல்வி அலுவலக அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது விசாரணைக்காக வந்த ஆசிரியா் அரவிந்தை மாணவா்கள் கண்ணீா் மல்க வரவேற்றனா்.

அரவிந்த் மீது வீண்பழி சுமத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமா்த்தும் வரை போராடப் போவதாகப் பொதுமக்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக கல்வி அலுவலக அதிகாரிகள் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தில் அறக்கட்டளைகள் சாா்பில் நடைபெற்ற இலவசத் தையல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் வ.உ.சிதம்பர... மேலும் பார்க்க

கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து: ஏராளமான பொருள்கள் எரிந்து நாசம்

போடி அருகே கரும்புத் தோட்டம், கரும்பு ஆலை, வீடு ஆகியவற்றில் பற்றிய தீயால் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சின்னாறு புலம் பகுதியில் கருப்பையா என்பவரு... மேலும் பார்க்க

க. விலக்கு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், க. விலக்கு பகுதியில் புதன்கிழமை (ஜூலை 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. விலக்கு து... மேலும் பார்க்க

அரசு விடுதியின் பெயரை அழித்தவா்கள் மீது வழக்கு

போடி அருகே அரசு விடுதியின் பெயா்ப் பலகையில் சில வாா்த்தைகளை அழித்தவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியில் அரசு ... மேலும் பார்க்க

மாணவிக்குப் பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரா் கைது

போடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே 16 வயது பள்ளி மாணவியை, அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.தேனி அருகே ஆனைமலையன்பட்டி பகுதியில், உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ஞாயி... மேலும் பார்க்க