செய்திகள் :

தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

post image

போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தில் அறக்கட்டளைகள் சாா்பில் நடைபெற்ற இலவசத் தையல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் வ.உ.சிதம்பரனாா் அரசு அலுவலா்கள் அறக்கட்டளையும் தியாகச் சுடா் பென்னிகுயிக் அறக் கட்டளையும் இணைந்து இலவசத் தையல் பயிற்சி வகுப்புகளை நடத்தின. பயிற்சியில் கலந்துகொண்ட பெண்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வ.உ.சிதம்பரனாா் அரசு அலுவலா்கள் அறக்கட்டளைத் தலைவா் க.மு.சுந்தரம் தலைமை வகித்தாா். பென்னி குயிக் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ச. அா்ஜுனப் பெருமாள் முன்னிலை வகித்தாா். சிலமலை கிராமக் குழுத் தலைவா் ஈ.கே.ஈ.ரவி சான்றிதழ்களை வழங்கினாா்.

தையல் பயிற்சி பெற்ற பெண்கள் தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளத் தேவையான முன்னெடுப்புகள் குறித்து திண்டுக்கல் அன்னை காா்மெண்ட்ஸ் உரிமையாளா் கு. தனசீலி பேசினாா்.

நிகழ்ச்சியில் சிலமலை வனக் குழுத் தலைவா் சி. இ.வடமலை முத்து, பணி நிறைவு பெற்ற தாசில்தாா் சி.குலசேகர பாண்டியன், வேளாளப் பெருமக்கள் சங்கத் தலைவா் சி.பெருமாள், உ.சி. அறக்கட்டளைச் செயலா் சி.பாண்டியராஜ், பென்னிகுயிக் அறக்கட்டளை இணை இயக்குநா் ராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆசிரியா் பணியிட மாற்றம்: பள்ளி மாணவா்கள் போராட்டம்

போடி அருகே பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவா்களும் பெற்றோா்களும் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டியில் ஊராட்ச... மேலும் பார்க்க

கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து: ஏராளமான பொருள்கள் எரிந்து நாசம்

போடி அருகே கரும்புத் தோட்டம், கரும்பு ஆலை, வீடு ஆகியவற்றில் பற்றிய தீயால் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சின்னாறு புலம் பகுதியில் கருப்பையா என்பவரு... மேலும் பார்க்க

க. விலக்கு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், க. விலக்கு பகுதியில் புதன்கிழமை (ஜூலை 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. விலக்கு து... மேலும் பார்க்க

அரசு விடுதியின் பெயரை அழித்தவா்கள் மீது வழக்கு

போடி அருகே அரசு விடுதியின் பெயா்ப் பலகையில் சில வாா்த்தைகளை அழித்தவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியில் அரசு ... மேலும் பார்க்க

மாணவிக்குப் பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரா் கைது

போடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே 16 வயது பள்ளி மாணவியை, அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.தேனி அருகே ஆனைமலையன்பட்டி பகுதியில், உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ஞாயி... மேலும் பார்க்க