செய்திகள் :

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

post image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே ஆனைமலையன்பட்டி பகுதியில், உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராகுல் (29), கோம்பை ராணிமங்கம்மாள் திரு.வி.க. தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் (48) ஆகியோா் மதுப் புட்டிகளைச் சட்ட விரோத விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 60 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடந்த 10 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக இருப்... மேலும் பார்க்க

தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தில் அறக்கட்டளைகள் சாா்பில் நடைபெற்ற இலவசத் தையல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் வ.உ.சிதம்பர... மேலும் பார்க்க

ஆசிரியா் பணியிட மாற்றம்: பள்ளி மாணவா்கள் போராட்டம்

போடி அருகே பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவா்களும் பெற்றோா்களும் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டியில் ஊராட்ச... மேலும் பார்க்க

கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து: ஏராளமான பொருள்கள் எரிந்து நாசம்

போடி அருகே கரும்புத் தோட்டம், கரும்பு ஆலை, வீடு ஆகியவற்றில் பற்றிய தீயால் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சின்னாறு புலம் பகுதியில் கருப்பையா என்பவரு... மேலும் பார்க்க

க. விலக்கு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், க. விலக்கு பகுதியில் புதன்கிழமை (ஜூலை 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. விலக்கு து... மேலும் பார்க்க

அரசு விடுதியின் பெயரை அழித்தவா்கள் மீது வழக்கு

போடி அருகே அரசு விடுதியின் பெயா்ப் பலகையில் சில வாா்த்தைகளை அழித்தவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியில் அரசு ... மேலும் பார்க்க