3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
யேமனில் நிமிஷா பிரியா தூக்கு தண்டனை ரத்து? சகோதரர் மறுப்பு!
கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று யேமன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலை கொல்லப்பட்ட மஹதியின் சகோதரர் மறுத்துள்ளார்.
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை யேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் வெளியிட்டது.
இந்த தகவல் வெளியான சற்று நேரத்தில், 2017ஆம் ஆண்டு யேமனைச் சேர்ந்த தொழிலதிபர், கொலை செய்யப்பட்ட தலால் அப்டோ மஹதியின் சகோதரர் அப்துல் பட்டாஹ் மஹதி, நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பொது வெளியில் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இவர் இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் யேமன் நாட்டின் அட்டார்னி ஜெனரலுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். எங்கள் சகோதரர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் எங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகிறோம். அதில் எந்த தாமதமும் இல்லாமல் விரைவாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதே வேளையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் வெளியிட்ட அறக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.
மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிக்கையை மத்திய வெளியுறவு விவகாரத் துறை மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.