செய்திகள் :

ராணிப்பேட்டை: பள்ளி வேனில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் - ஓட்டுநர் உட்பட இருவருக்கு 4 வருட சிறை!

post image

ராணிப்பேட்டை மாவட்டம், நவல்பூர் பகுதியைச் சேர்ந்த வேன் உரிமையாளர் தயாளன் (வயது 51). தனியார் பள்ளி ஒன்றில், மாணவ - மாணவிகளை அழைத்துச் செல்லும் வாடகைதாரராக வேனை இயக்கி வந்தார் தயாளன். வேன் ஓட்டுநராக ராணிப்பேட்டை சிப்காட் அருகிலுள்ள புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (38) என்பவரை நியமித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 10-6-2022 அன்று மாலை வழக்கம்போல மாணவ - மாணவிகளை அவரவர் வீடுகளில் விடுவதற்காக பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர்.

அனைத்து மாணவர்களும் இறங்கிவிட்ட நிலையில், கடைசியாக 13 வயது மாணவி ஒருவரை மட்டும் சிப்காட் பகுதியிலுள்ள அவரின் வீட்டில் விடுவதற்காகச் சென்றனர். அப்போது, வேன் உரிமையாளர் கோபிநாத் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். ஓட்டுநர் கோபிநாத்தும் பாலியல் வக்கிரத்துடன் மாணவியை நெருங்கியிருக்கிறார்.

தயாளன் - கோபிநாத்

இது குறித்து, மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததால், அவர்கள் உடனடியாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீன் வழங்கப்படாமல் நீதிமன்றக் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் துரிதமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து, நேற்றைய தினம் (28-7-2025) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் குற்றம் புரிந்த தயாளன், கோபிநாத் இருவருக்குமே 4 வருட சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை விலக்க சென்றவர் கொலை!

திருவாரூர் மாவட்டம், பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் வயது 23. இவர் தென்காசி, பறையபட்டி பகுதியில் வசித்து வருகிறார். திருவாரூர் புலிவலம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் வயது 22. இருவரும... மேலும் பார்க்க

குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், காவல்துறை விளக்கமும்!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சூசைமரியாள்(80). இவரது பேரனை ஒரு வழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் இன்று ஆதிகாலையில் வீட்டிற்க... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?

சென்னையில் போதைக்காக சிலர் உடல் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதனால், பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருக... மேலும் பார்க்க

``நீ எப்படி மோடியை விமர்சிக்கலாம்..." - சு.வெங்கடேசனுக்கு வந்த கொலை மிரட்டல் - வலுக்கும் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஆளும் அரசையும், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சு.வெங்கடேசனுக்கு கொலை ம... மேலும் பார்க்க

நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள இடைக்கால் பகுதியைச் சேர்ந்த இரு இளஞ்சிறார், நேற்று இரவு ஊருக்கு ஒதுக்கு புறமான குளக்கரை பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மாற்று சம... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 30 வயதாகும் இளம்பெண் ஒருவர் கடந்த 26.07.2025-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் (27.07.2025), அவரின் அருகில் ஆ... மேலும் பார்க்க