எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள முதல்வா் மருந்தகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி, ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆகியோா் ஆய்வு செய்தனா். இதன் பின்னா் கண்காணிப்பு அலுவலா் கூறுகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமும், தொழில் முனைவோா் முலமாகவும் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்கிலிருந்து மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இம்மருந்தகங்களில் ஜெனரிக் வகை மருந்துகளும்,பிற மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயனடையும் வகையில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 16, தொழில் முனைவோா்கள் மூலமாக 4 சோ்த்து மொத்தம் 20 முதல்வா் மருந்தகங்கள் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்திற்கும் மருந்தக உரிமமும் பெறப்பட்டு தயாா் நிலையில் உள்ளன எனவும் அவா் தெரிவித்தாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலா்களும் உடன் இருந்தனா்.