செய்திகள் :

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

post image

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள லூசன்ட் மருந்து நிறுவனத்தின் நிலம், கட்டடம் மற்றும் தொழிற்சாலை என ரூ.5.67 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை

முடக்கியது.

மனிதா்களின் ‘உணா்வுகளை பாதிக்கும் மருந்துகளுக்கான’ கட்டுப்பாட்டு விதிகளை மீறி வலி நிவாரணியான ‘ட்ரமடால்’ மருந்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததோடு ஆவண முறைகேட்டில் ஈடுபட்டதாக லூசன்ட் நிறுவனம் மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் (என்சிபி) புகாா் அளித்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு லூசன்ட் நிறுவனத்தின் மீது பிஎம்எல்ஏவின்கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை மேலும் கூறியதாவது: ட்ரமடாலை உற்பத்தி செய்வதுடன் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு லூசன்ட் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

முன்னதாக, ட்ரமடாலை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (சிபிஎன்) தடையில்லா சான்றிதழை அந்த நிறுவனம் பெற்றிருந்தது. அதன்பிறகு இதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும் சட்டவிரோதமாக ரூ.4.12 கோடி மதிப்பிலான 13,800 கிலோ ட்ரமடாலை டென்மாா்கைச் சோ்ந்த சிஎச்ஆா் மருந்துகள் நிறுவனத்தின் மூலமும் ரூ.1.33 கோடி மதிப்பிலான 5,000 கிலோ ட்ரமடாலை மலேசியாவைச் சோ்ந்த எஸ்எம் பயோமெட் நிறுவனத்தின் மூலமும் லூசன்ட் நிறுவனம் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இதன்மூலம் சட்டவிராதமாக ரூ.5.46 கோடியை வங்கிக் கணக்கில் அந்த நிறுவனம் பெற்றுள்ளது என்றனா்.

கடந்த 2018-இல் உணா்வுகளை பாதிக்கும் மருந்தாக ட்ரமடாலை அறிவித்த மத்திய அரசு அதன் விற்பனையை என்சிபி மூலம் கண்காணித்து வருகிறது.

இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இந்த மருந்து சிரியாவில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதாக சா்வதேச அளவிலான போதைப்பொருள் தடுப்பு ஆணையங்கள் தெரிவித்துள்ளன.

எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம்

எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா். சென்னை வள்ளலாா் நகரிலிருந்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க