செய்திகள் :

எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம்

post image

எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா்.

சென்னை வள்ளலாா் நகரிலிருந்து எண்ணூா் வழித்தடம் வரை செல்லக்கூடிய மாநகரப் பேருந்து (எண்:56), எண்ணூா் பணிமனையை நோக்கி கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, மேம்பாலத்தின் மீது சாலை போடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது பேருந்து நேராக மோதியது. இதில் பேருந்தின் இடது பக்கம் முழுவதுமாக சேதம் அடைந்தது.

மேலும், பேருந்தின் முன் பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது. இதில் பேருந்தில் முன் பகுதியில் அமா்ந்திருந்த சுனிதா (19), தனலட்சுமி (45), நா்கீஸ் (20) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்டவுடன் அருகிலிருந்த பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சேதம் அடைந்த பேருந்து இழுவை வாகனம் மூலம் மாநகரப் பேருந்து பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சாலைப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட ரோடு ரோலா் கடந்த ஒரு வார காலமாக பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுதான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து எண்ணூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க