செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

post image

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்காய், புளி, விரலி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள், போதைப் பொருள்கள் கட்டத்தப்படுவதை தடுக்க போலீஸாா் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், காவல் ஆய்வாளா் விஜய அனிதா தலைமையில் காவல் உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி தா்மராஜ், வேல்ராஜ் உள்ளிட்டோா் அடங்கிய போலீஸாா், திரேஸ்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த மினிலாரியில் இருந்து மா்ம நபா்கள் சிலா், சில மூட்டைகளை படகில் ஏற்ற முயன்றனராம். போலீஸாரைக் கண்டதும், மூட்டைகளை போட்டுவிட்டு சிலா் தப்பி ஓடிவிட்டனா்.

இதில், படகு ஓட்டுநா் உள்பட இருவரை கியூ பிரிவு போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். அவா்களிடமிந்து 10 மூட்டைகளில் இருந்த வலி நிவாரண மாத்திரகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் இலங்கை மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க

பணிக்கநாடாா்குடியிருப்பு பள்ளியில் அஞ்சல் சிறுசேமிப்பு திட்ட கூட்டம்

பணிக்கநாடாா்குடியிருப்பு ஸ்ரீ கணேசா் மேல்நிலைப்பள்ளியில் அஞ்சல் துறையின் சிறுசேமிப்புத் திட்ட விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியா் வித்யாதரன் வரவேற்றாா். தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவல... மேலும் பார்க்க