செய்திகள் :

ஹமாஸ் ஒப்படைத்த சடலம் இஸ்ரேலிய பெண்ணுடையது தான்! குடும்பத்தினர் உறுதி!

post image

ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இடையில் கையெழுத்தான காஸா பகுதியின் மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிடமிருந்து சிறைப்பிடித்துள்ள பாலஸ்தீனர்களின் விடுதலைக்கு பதிலாக ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் ஓர் பகுதியாக ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் உயிரிழந்த இஸ்ரேலியர்களான ஷிரி பிபாஸ் (வயது 33) , அவரது இரு குழந்தைகள் மற்றும் ஓடட் லிஃப்ஷிட்ஸ் (84) என்ற ஓய்வு பெற்ற செய்தியாளா் ஆகியோரின் சடலங்கள் சா்வதேச செஞ்சிலுவைச் இயக்கத்திடம் காஸாவின் கான் யூனுஸ் நகரில் கடந்த பிப்.20 அன்று ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், இஸ்ரேலில் நடத்தப்பட்ட சோதனையில் ஷிரி பிபாஸின் உடலைத் தவிர மற்ற மூவரது அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டது. மேலும், ஷிரி பிபாஸின் உடலுக்கு பதிலாக உயிரிழந்த வேறொரு பாலஸ்தீனப் பெண்ணின் உடலை ஹமாஸ் படையினர் ஒப்படைத்திருப்பதாகக் இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

இதையும் படிக்க: ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொடூரமான மற்றும் தீங்கிழைக்கும் வகையில் மீறியதாகக் குற்றம் சாட்டியதுடன் இதற்கு அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் எனவும் அவர் சபதம் செய்தார்.

மேலும், நேற்று (பிப்.21) ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை இயக்கத்திடம் தாங்கள் ஓப்படைத்தது அப்பெண்ணுடைய சரியான உடல் தான் என்று கூறியிருந்த நிலையில் இன்று (பிப்.22) இஸ்ரேலில் நடத்தப்பட்ட அடையாளம் காணும் சோதனையில் ஒப்படைக்கப்பட்ட உடலானது ஷிரி பிபாஸினுடையது தான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.

இந்த விவகாரங்களுக்கு இடையில் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இன்று (பிப்.22) மற்றொரு பிணைக் கைதிகளின் குழுவானது பாலஸ்தீன சிறைவாசிகளுக்கு பதிலாக ஒப்படைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்... மேலும் பார்க்க

திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வ... மேலும் பார்க்க

வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!

இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்... மேலும் பார்க்க

மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பக... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க