செய்திகள் :

திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!

post image

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வாகியான ஷேக் நியாமுல் அவரது இரு சக்கர வாகனத்தில் நேற்று (பிப்.21) இரவு வந்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஷேக் நியாமுலை கட்டைகளினாலும், கற்களினாலும் தாக்கியுள்ளனர். இதனால், அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு சியூரி சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேற் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிக்க: ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

இந்நிலையில், ஷேக் நியாமுலின் சகோதரரும் திரிணாமுல் காங். நிர்வாகியுமான இனாமுல் ஷேக் என்பவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காகப் பணியாற்றிய திரிணாமுல் காங். கட்சியின் மற்றொரு பிரிவினரால் நியாமுல் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றசாட்டை முழுவதுமாக மறுத்துள்ள அம்மாவட்ட திரிணாமுல். காங் அணியினர் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கலவரத்தை தூண்டுவதற்காக பாஜகவினர் தான் இந்த கொலையை செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், இந்த குற்றசாட்டை மறுத்துள்ள பாஜக இந்த கொலையானது அம்மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலையை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளது. இந்த கொலைக் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலையாளிகளை பிடிக்கும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்... மேலும் பார்க்க

வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!

இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்... மேலும் பார்க்க

மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பக... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க

ஹமாஸ் ஒப்படைத்த சடலம் இஸ்ரேலிய பெண்ணுடையது தான்! குடும்பத்தினர் உறுதி!

ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இடையில் கையெழுத்தான காஸா பகுதியின் மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க